முன்னாள் அமைச்சரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்

68பார்த்தது
முன்னாள் அமைச்சரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.சுதாகருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து, சுமார் 4.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் இன்று (ஏப்ரல் 26) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தகவல் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி