கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓபிஎஸ் கருத்து

57பார்த்தது
கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓபிஎஸ் கருத்து
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தாரைவார்க்கப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை நாட்டிடமிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் ஆற்றொணாத் துயரத்துக்கு ஆளாகி வருகின்றார்கள். அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் மற்றும் வலைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி