ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில், BSP தலைமை அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. குடியிருப்பு பகுதி மற்றும் குறுகிய சாலை என்பதால் அனுமதி வழங்க முடியாது எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். “வேறு ஏதேனும் இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன்” என நீதிபதி கூறியுள்ளார்.