3 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மாமா.!

83பார்த்தது
3 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மாமா.!
கர்நாடக மாநிலம் நிம்மகாயஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் கௌதம்(3). நேற்று(ஜூன் 19) மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த கௌதமை அவரது மாமா ரஞ்சித்(30) அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் மஞ்சுநாத் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சிந்தாமணி தாலுகாவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சிறுவன் கௌதம் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிறுவனை அவனது மாமாவே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தலைமறைவான ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி