"இ-பாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்க" - ஜவாஹிருல்லா

70பார்த்தது
"இ-பாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்க" - ஜவாஹிருல்லா
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். அவர் கூறும் பொழுது, “இந்த நடைமுறை பல பிரச்சினைகளை உண்டாக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். பயன்கள் வருகை குறைந்தால் அதை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்” என்றார்.

தொடர்புடைய செய்தி