தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்

53பார்த்தது
தள்ளுபடியுடன் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு முக்கிய வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன்மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநாகராட்சியில் வருடத்துக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தள்ளுபடியுடன், சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாளாகும்.

தொடர்புடைய செய்தி