வாலிபரை பாலியல் தொழிலுக்கு அழைத்த இளம்பெண் கைது

27621பார்த்தது
வாலிபரை பாலியல் தொழிலுக்கு அழைத்த இளம்பெண் கைது
கோவையை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் நேற்று வாலாங்குளம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், அந்த வாலிபரிடம் பணம் கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து அந்த வாலிபர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்தது போத்தனூர் அருள்முருகன் நகரை சேர்ந்த அன்சியா பானு (27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி