கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் கடலில் குதித்த மீனவர்கள்

50பார்த்தது
கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் கடலில் குதித்த மீனவர்கள்
நாகை செருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவரது படகில் அத்துமீறி இலங்கை கடல் கொள்ளையர்கள் ஏறியுள்ளனர். முருகன் மற்றும் 3 மீனவர்களை இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தாக்கி 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். அவர்களை சக மீனவர்கள் காப்பாற்றினர். காயத்தோடு தப்பிய மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி