பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில செயலாளர் பி. சண்முகம் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டும் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தாமதம் செய்து வருகின்றனர். விரைவில் பாலத்தை திறக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாம்பன் பாலத்தில் போராட்டம் நடத்தப்படும்