காலாவதியான கூல்ட்ரிங்ஸ் குடித்த இளைஞர் வாந்தி

65பார்த்தது
னமதுரை பிரிஸ்ட் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் ஜான் பெனடிக்ட். இவர் தனது வழக்கறிஞர் நண்பர்களுடன் திருப்பாலைக்குடியில் ஒரு வழக்கு விசாரணைக்காக சென்றிருக்கிறார். விசாரணை முடித்த பிறகு வந்திருந்த நண்பர்கள் பீர் குடித்து செல்லலாம் என கூறிய போது திருப்பாலைக்குடி அருகில் மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் இவருடன் மூன்று பேர்கள் பீர் குடிக்க சென்றுள்ளனர். அப்போது மதுப்பழக்கம் இல்லாத ஜான் அந்த மதுபான கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்திருக்கிறார். குடித்த 10 நிமிடத்தில் அவருக்கு தலைச்சுற்று ஏற்பட்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டும் வாந்தி எடுத்திருக்கிறார். சுதாரித்தவர் வாங்கிய கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் தேதியை பார்த்தபோது காலாவதியாகி 40 நாட்கள் ஆன கூல்ட்ரிங்க்ஸை குடித்திருந்தது தெரியவந்துள்ளது
இதுகுறித்து மதுபான பார் கடைக்காரரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை எனவும், இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மதுபான பார் உரிமையாளர் வந்த நிலையில் அவரிடம் இது குறித்து தெரிவித்து இருக்கின்றனர். அவர் இது குறித்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி