நாளை ராமசாமிபட்டியில் மக்களுடன் முதல்வன் திட்டம் முகாம்.!

84பார்த்தது
கமுதி அருகே ராமசாமிபட்டியில் ஜூலை 16ஆம் தேதி மக்களுடன் முதல்வன் திட்ட முகம் நடைபெற உள்ளதாக கமுதி வட்டாட்சியர் எஸ். காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி ஊராட்சியில் நாளை செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் தலைமையில மக்களுடன் முதல்வன் திட்ட முகம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் ராமசாமிபட்டி, எம். எம். கோட்டை, நீராவி, கே. எம். கோட்டை, என். கரிசல்குளம், மேலராமநதி உள்ளிட்ட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி