பூர்ணிமா பௌர்ணமியை முன்னிட்டு முற்றோதுதல் நிகழ்வு.!

84பார்த்தது
எக்கக்குடி கிராமத்தில் குரு பூர்ணிமா பௌர்ணமியை முன்னிட்டு முற்றோதுதல் நிகழ்வு நடைபெற்றது

51 பதிகம் பாடி ஆண்டவனை ஆராதனை செய்ததாக சிவ ராஜகோபால் பேட்டி.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் ஜீவசமாதியில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உலக சிவனடியார்கள் திருகூட்டம் மற்றும் மங்களநாதர் சிவனடியார் திருக்கூட்டம் இணைந்து நாள் முழுவதும் கைலாய வாத்தியங்கள் முழங்க திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர் பின் சூட்டுக்கோல் செல்லப்ப சாமிக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.

இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் பின் பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமும் வழங்கப்பட்டது மேலும் இது பற்றி சிவ ராஜகோபால் அளித்த பேட்டியில் 51 பதிகம் பாடி ஆண்டவனை ஆராதனை செய்ததாக தெரிவித்ததார்.

தொடர்புடைய செய்தி