ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து நேற்று (மார்-17) மீன் பிடிக்க சென்ற மூன்று மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை கைது செய்தது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தடுக்க வேண்டும் மற்றும் இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் மீட்டு தர மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.