குடிநீர் தொட்டி சேதம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

79பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சொந்த செலவில் குடிநீர் தொட்டி அமைத்து அதிலிருந்து தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அருகில் இருந்த சாம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் ட்ரிலிங் மெஷினை கொண்டு குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கேட்டதற்கு பெண்களை சாதி குறித்து வன்முத்தோடு பேசியதோடு அல்லாமல் பெண்களை இழிவாகவும் அநாகரிகமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார் அங்கு சென்றபோது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி