ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற 13ஆம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆந்திரா காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை ஆதரித்து இன்று நடிகர் ராம்சரண் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.