மறைந்த ராஜீவ் காந்தி கடந்த 1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.1989 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசிய உரை மிக பிரபலம். இதுவே அவரது இறுதி சுதந்திரதின உரையாக இருக்கும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ராஜீவ் காந்தியின் உரையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தொடர்பான உறுதி தெரிந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1991-ல் அவர் படுகொலை செய்யப்பட்டார்.