ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்' தற்போது அசாமில் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பேருந்தின் மீது ஏறி உரையாற்ற தொடங்கினார். நாடுமுழுவதும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கும், அரசுக்கும் மாணவர்கள் கண்மூடித்தனமாக கீழ்ப்படிய நேரிடுகிறது என்றும், எந்த இடையூறுகள் வந்தாலும் இலக்கை தொடர்வோம் என்று கூறினார்.