ராகுல் காந்தி 2 தொகுதிகளில் வெற்றி.. சாடிய கூட்டணி வேட்பாளர்!

53பார்த்தது
ராகுல் காந்தி 2 தொகுதிகளில் வெற்றி.. சாடிய கூட்டணி வேட்பாளர்!
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்று, இதில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய உள்ளார் ராகுல் காந்தி. இதற்கிடையில், கோழிக்கோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ கட்சியின் வயநாடு தொகுதி வேட்பாளர் ஆனி ராஜா, மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதோடு, ரேபரேலியிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இரண்டாவது முறையாக வயநாட்டில் வெற்றி பெற வைத்த மலை மாவட்ட மக்களுக்கு ராகுல் உண்மையில் துரோகம் செய்துவிட்டார். ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது நெறிமுறைகளை மீறிய செயல் என சாடினார்.

வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா தோல்வியடைந்தார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி