அன்னவாசலில் காங்., வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பு

71பார்த்தது
அன்னவாசலில் காங்., வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பு
கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் வரும் அன்னவாசல் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கருர் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக களம் காணும் ஜோதிமணி விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாம் கட்டமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அன்னவாசலில் பிரசாரம் மேற்கொண்ட அவர் கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்ற நாள்கள், தொகுதியில் இருந்த நாட்களை கணக்கிட்டுக் கூறியஅவர், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பத்தாண்டுகாலமாகபதவியில் இருக்கும் பாஜக அரசு வேலைநாள்களை அதிகரிக்காதது, ஊதிய நிலுலை வைத்து பணியாளர்களை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது உள்ளிட்டவற்றை எடுத்து கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் 'இந்தியா' கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி