புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பேருந்து நிறுத்தத்தில், தனியார் பஸ்சின் மேற்கூரையில் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் செல்லும் மின்வயரை கடிக்க முயன்றார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் கூற உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.