மணமேல்குடி: தந்தூரி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை

78பார்த்தது
மணமேல்குடி: தந்தூரி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை
அசாம் மாநிலம் நகர் பாரியை சேர்ந்த கோபால் முடி. இவர் மணமேல்குடி பிரியாணி கடையில் தந்தூரி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று(18ஆம் தேதி) காலை அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஏஓ கொக்கையா ராஜா அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி