புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திரபுரம் பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அறந்தாங்கி போலீசார் எலக்காக்கோட்டையை சேர்ந்த ரவி என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ரூ. 1,740 ரொக்கம், ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் ரவி சிறையில் அடைக்கப்பட்டார்.