வாய்த்தகராறில் தம்பி அடித்துக்கொலை அண்ணன் உட்பட 5 பேர் கைது!

76பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி: அருகே வாய்த்தகராறில் அண்ணன்
தாக்கியதில் படுகாயமடைந்த தம்பி உயிரிழந்தார். அறந்தாங்கி அருகே மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன்கள் ரமேஷ் (35), வீரசேகர் (30). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த ரமேஷ் தாக்கியதில் வீரசேகர் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணமூர்த்தி, ஆவுடையப்பன், ஆறுமுகம், சேதுராயனேந்தல் ஆறுமுகம் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி