புதுக்கோட்டை, கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பைசல் முகமது (19). இவர், 16 வயது சிறுமிக்கு பிறந்த நாள் பரிசு வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் யமுனாதேவி விசாரணை செய்து, பைசல் முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.