வல்லத்திராகோட்டையில் மணல் கடத்திய இருவர் கைது

73பார்த்தது
புதுக்கோட்டை வல்லத்திராகோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கால் யூனிட் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பாண்டியன் மற்றும் தேவதாசன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மணலை கடத்தியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவலர்கள் தப்பி ஓடிய மாரிகண்ணுவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி