வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரியுடன் தகாத உறவில் இருந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். தூதரக அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த மேஹ்னா, ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில், மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.