ஆலங்குடியில் நாளை (ஆக. 19) மின்தடை

75பார்த்தது
ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, கோவிலூர், பாச்சிக்கோட்டை, கல்லாலங்குடி, பாத்தம்பட்டி, கே. வி. கோட்டை, புதுக்கோட்டைவிடுதி, தவளைப்பள்ளம், மாஞ்சான்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், வம்பன், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, களபம், வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, சம்பட்டிவிடுதி, மாத்தூர் தொண்டைமான்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை ஆக. 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், வடகாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை ஆக. 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி