புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
இதில், தாசில்தார் பெரியநாயகி மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.