உலக நன்மை வேண்டி அம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம்

61பார்த்தது
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் அருகே அமைந்துள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வர்ண முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஏழாம் ஆண்டு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் இடைஞ்சாவடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு விநாயகர் கோவிலில் இருந்து 1008 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் மற்றும் மாட வீதிகளின் வழியாக வந்து ஆலயத்தை வந்தடைந்தது. ஆண்கள் பெண்கள் என 1008 பக்தர்கள் பால்குடத்தை சுமந்து ஊர்வலமாக வந்து வர்ண முத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்த பாலபிஷேகம் செய்வதால் அம்மன் குளிர்ந்து மனம் மகிழ்ந்து வெப்பம் தணிந்து அனைத்து மக்களும் நலமுடன் வாழ அம்மனின் அருள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி