காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதற்க்கு முன்பாக பல்வேறு திரவிய பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.