புதுச்சேரி மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப்

59பார்த்தது
புதுச்சேரி மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப்
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வரும் ஜன.25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு லேட்டாப் வழங்கும் திட்டம் தமிழகத்தில் முதலில அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை புதுச்சேரி அரசும் பின்பற்றி வருகிறது.

தொடர்புடைய செய்தி