காணும் பொங்கலுக்கு மெரினாவில் குவிந்த மக்கள்

73பார்த்தது
காணும் பொங்கலுக்கு மெரினாவில் குவிந்த மக்கள்
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அதிகளவிலான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடி பொழுதை கழித்தனர்.

தொடர்புடைய செய்தி