திருச்சி: உறையூர் ஏயூடிவி குடோன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (27). இவர் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் முகமது அசாருதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.