திருப்பத்தூர் மாவட்டம் மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் பயணிகளுடன் சென்ற பழைய அரசுப் பேருந்து ஏற முடியாமல் பின்னோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த பயணிகள் உயிருக்கு பயந்து பேருந்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றனர். இதையடுத்து தட்டுத்தடுமாறி பேருந்து மலை உச்சிக்கு தவழ்ந்து சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.