தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை

68பார்த்தது
தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை
காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது பைனான்சியர் ககன் போத்ரா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 4-வது அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன் விசாராணைக்கு வந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன் கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தொடர்புடைய செய்தி