ஜவஹர் நவோதயாவில் ரேகிங்: 5 மாணவர்கள் மீது நடவடிக்கை

70பார்த்தது
ஜவஹர் நவோதயாவில் ரேகிங்: 5 மாணவர்கள் மீது நடவடிக்கை
அருணாச்சலப்பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் ராகிங் கொடுமை நடந்தது. 8ஆம் வகுப்பு மாணவர்களை 11ஆம் வகுப்பு மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். பல மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களின் முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம், ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி