ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்

84பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் ஒரு என்கவுன்டர் நடந்துள்ளது. தோடா மாவட்டத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தோடா மாவட்டத்தில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

தோடா மாவட்டத்தில் உள்ள சாட்டர் கல்லாவில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடி மீது ஜூன் 11ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் காயமடைந்தனர். இரட்டை தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி