இரண்டாவது முறையாக இந்திய
பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி இந்த பயணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைப்பர் எனவும், திருப்பூரில் நடக்கும்
பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தை திறந்து வைக்க
பிரதமர் மோடி தமிழகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.