ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - அதிரடி உத்தரவு

1070பார்த்தது
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - அதிரடி உத்தரவு
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுபாடுகள் விதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கனது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதிக்கவில்லை என தொடரப்பட்டிருந்தது. அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும்போது பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்வதாக இருந்தால், முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் வைப்பு தொகையை திரும்பி பெற முடியாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி