பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் ஆலோசனை

24205பார்த்தது
பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் ஆலோசனை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஜூன் 1ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஜூன் 3ஆம் தேதி திறக்கலாம் என்றால் அதற்கு மறுநாள் ஜூன் 4ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேலும் வழக்கத்தை விட வெயிலின் கடுமை அதிகமாக உள்ளது. எனவே பள்ளி திறப்பை ஜூன் இரண்டாவது வாரத்தில் வைத்துக்கொள்ளலாமா என ஆலோசனை நடத்துவருவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி