தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை.. எச்சரிக்கை

19975பார்த்தது
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை.. எச்சரிக்கை
ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும். அதிகபட்ச வெப்பநிலை 42°C வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 2°C அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி