ரூ.1.75 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் பறிமுதல்

50பார்த்தது
ரூ.1.75 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் பறிமுதல்
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் செல்போன்களை திருடும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில், 5 சூடான் நாட்டவர்கள் உட்பட 17 பேர் உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்புள்ள 703 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திருடப்பட்ட செல்போன் அனைத்தும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.