ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் இன்று (ஜூன் 22) மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். பின்னர், அங்கு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் 20 மாணவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை மீட்ட ஆசிரியர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.