பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு - நாளை முதல் அமல்

71பார்த்தது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு - நாளை முதல் அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி கோவா அரசு இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் நிதித் துறையின் துணைச் செயலர் பிரணாப் பி பட் கூறுகையில், “வாட் வரி லிட்டருக்கு 1 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 36 பைசாவும் உயர்த்தப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நாளை (ஜூன் 22) முதல் அமலுக்கு வருகிறது” என்றார். தற்போது கோவாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.40க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.90க்கும் விற்பனையாகிறது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என கோவா எதிர்க்கட்சித் தலைவர் யூரி அலெமாவோ வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி