கள்ளச்சாராய விவகாரம் - மேலும் 2 பேர் கைது

56பார்த்தது
கள்ளச்சாராய விவகாரம் - மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கள்ளச்சாராயம் விற்ற மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கள்ளக்குறிச்சியை அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி சகுந்தலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி