“என்ன சொன்னாலும் இப்படி தான் செய்கிறார்கள்” - மா.சு வருத்தம்

84பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஷச்சாராயம் குடித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் மீண்டும் மீதமிருந்த சாராயத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு என்னதான் சொன்னாலும் இப்படி அறியாத்தனமாக இருப்பவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி