பெரம்பலூர்: நெடுஞ்சாலையில் கிடந்த முதியவர் சடலம்

65பார்த்தது
பெரம்பலூர்: நெடுஞ்சாலையில் கிடந்த முதியவர் சடலம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி உள்ள பொதுமக்கள், மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப் வைத்து, உயிரிழந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், விலாசம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை பச்சை கலர் பெல்ட் அணிந்திருந்த இவரைப் பற்றி தகவல் அறிந்தால் காவல் துறைக்கு 9498100696 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறை சார்பில் ஏப்ரல் 22ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி