முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

67பார்த்தது
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டம்
2024 – ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் , மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல்.


சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1, 00, 000/- ரொக்கம் பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2024 – ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் - 15ம் தேதி அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் வழங்கப்டவுள்ளது. இதில் 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www. sdat. tn. gov. in என்ற இணைய தளத்தில் மே 1ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி மாலை 4. 00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இணையத்தில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல் துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவைகளை மே 18ஆம் தேதி மாலை 4. 00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி