ஆலத்தூர்: அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

50பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மூத்த வழக்கறிஞர்கள் சிராஜ்தீன், சங்கர், பிரபாகரன் மற்றும் சட்டத் தன்னார்வலர் ஆசைத்தம்பி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு சட்டப்பணிகள் சிறப்புரையாற்றும் போது, பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபடுதல், மகளிருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பிரச்சினை ஏற்பட்டால் சட்ட உதவியை நாடவேண்டிய அவசியம், மாணவிகளுக்கு பாலியல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி குறித்தும், மாணவர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றபின் மோட்டார் வாகனங்களை இயக்கிச்செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து மகளிர் விடுபடுதல் மற்றும் தற்காத்துக் கொள்வது பற்றியும் விளக்கிப்பேசினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி