சென்னையில் குப்பை எடுத்துச் செல்லும் 3 சக்கர பேட்டரி வாகனத்தை, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இயக்குவது சட்டவிரோதம் என மாநகராட்சிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பேட்டரி வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க, சிறுமியின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர் வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சியே விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.